தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

காவிரியில் கூடுதல் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

News image

காவிரி கரை பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர்.

Updated On :28 ஜனவரி 2024, 10:04 am IST


எடப்பாடி: மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஆனால் இன்று அதிகாலை தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில், அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செக்கானூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட காவிரி கதவணை பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Story image

 பூலாம்பட்டி காவிரி கரை பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.  

குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மணல் திட்டுகள் உள்ளிட்ட ஆபத்தான பகுதிகளில் கரையோரப் பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் எனவும். காவிரி கரையோரங்களில் உள்ள படித்துறை,படகுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பது, துணிதுவைதல் மற்றும் நீரோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் ஆற்றை கடக்க முயற்சிப்பது, கரையோரப் பகுதிகளில் மீன் பிடித்தல் உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் செயல்களை பொதுமக்கள் தவிர்த்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.

இந்நிலையில், பூலாம்பட்டி காவிரி கரை பகுதிகளான, விசைப்படகு செலுத்துமிடம், பரிசில் துறை, படித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் தருணத்தில் அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள பேரிடர் மீட்பு முகாம், காவல்துறை அல்லது தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.