நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் காலமானார்; உடல் தானம்

எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் இன்று (ஆக.30) காலமானார். அவருக்கு வயது 82.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 4:33 pm IST


எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் செவ்வாய்க்கிழமை (ஆக.30) காலமானார். அவருக்கு வயது 82.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பலகுடி வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் தெ.சுந்தரமகாலிங்கம். ஓய்வு பெற்ற ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், தமிழில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், பல இலக்கிய கூட்டங்களிலும் சிறப்புரையாற்றியுள்ளார்.

இதனிடையே, வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தெ. சுந்தரமகாலிங்கம், இன்று (ஆக.30) காலமானார்.

இவர், காலத்தை வாசித்தல், துரோகம் வெட்கம் அறியாது ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். பிடல் காஸ்ட்ரோ புத்தகத்தை  தமிழாக்கம் செய்துள்ளார்.

மேலும், தினமணி, ஜனசக்தி, தீக்கதிர், உள்ளிட்ட நாளிதழ்களில் கட்டுரைகளும் உயிரெழுத்து, அம்ருதா,காலச்சுவடு உள்ளிட்ட மாத இதழில் கட்டுரைகள் மற்றும் வாசக கடிதம் எழுதியுள்ளார்.

இவரின் மனைவி அமர்ஜோதி 2021ஆம் ஆண்டு  உயிரிழந்தார். இவருக்கு திலீபன் (53)கோபிநாத் (52)கௌதமன்(47) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டே தனது கண் மற்றும் உடலை தானம் செய்ய வேண்டும் என அவர் எழுதி வைத்திருந்தார். அதன்படி, தெ. சுந்தரமகாலிங்கத்தின் உடல் மற்றும் கண்ணை குடும்பத்தினர் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு  தானமாக வழங்கினர்.

மேலும், தனக்கு எந்தவிதமான சடங்குகளும் செய்ய வேண்டாம் என அவர் எழுதி வைத்திருந்தததால்,  அதனையும் அவரின் குடும்பத்தினர் நிறைவேற்றினர்.

தெ. சுந்தரமகாலிங்கம் மரண சாசனம்

தெ. சுந்தரமகாலிங்கம் மரண சாசனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.