தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் காலமானார்; உடல் தானம்

எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் இன்று (ஆக.30) காலமானார். அவருக்கு வயது 82.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:41 pm IST


எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் செவ்வாய்க்கிழமை (ஆக.30) காலமானார். அவருக்கு வயது 82.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பலகுடி வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் தெ.சுந்தரமகாலிங்கம். ஓய்வு பெற்ற ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், தமிழில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், பல இலக்கிய கூட்டங்களிலும் சிறப்புரையாற்றியுள்ளார்.

இதனிடையே, வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தெ. சுந்தரமகாலிங்கம், இன்று (ஆக.30) காலமானார்.

இவர், காலத்தை வாசித்தல், துரோகம் வெட்கம் அறியாது ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். பிடல் காஸ்ட்ரோ புத்தகத்தை  தமிழாக்கம் செய்துள்ளார்.

மேலும், தினமணி, ஜனசக்தி, தீக்கதிர், உள்ளிட்ட நாளிதழ்களில் கட்டுரைகளும் உயிரெழுத்து, அம்ருதா,காலச்சுவடு உள்ளிட்ட மாத இதழில் கட்டுரைகள் மற்றும் வாசக கடிதம் எழுதியுள்ளார்.

இவரின் மனைவி அமர்ஜோதி 2021ஆம் ஆண்டு  உயிரிழந்தார். இவருக்கு திலீபன் (53)கோபிநாத் (52)கௌதமன்(47) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டே தனது கண் மற்றும் உடலை தானம் செய்ய வேண்டும் என அவர் எழுதி வைத்திருந்தார். அதன்படி, தெ. சுந்தரமகாலிங்கத்தின் உடல் மற்றும் கண்ணை குடும்பத்தினர் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு  தானமாக வழங்கினர்.

மேலும், தனக்கு எந்தவிதமான சடங்குகளும் செய்ய வேண்டாம் என அவர் எழுதி வைத்திருந்தததால்,  அதனையும் அவரின் குடும்பத்தினர் நிறைவேற்றினர்.

தெ. சுந்தரமகாலிங்கம் மரண சாசனம்

தெ. சுந்தரமகாலிங்கம் மரண சாசனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.