கோதாவரியில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்து 15 லட்சம் கன அடியாக உயர்வு

கோதாவரி ஆற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, நீர்வரத்து 15 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கோதாவரியில் வெள்ளப்பெருக்கு: நீர்வரத்து 15 லட்சம் கன அடியாக உயர்வு
Published on
Updated on
1 min read

கோதாவரி ஆற்றில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, நீர்வரத்து 15 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. 

இருப்பினும், வெள்ளம் குறைந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலைக்குள் தீவிரம் குறையக்கூடும். ஆனால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

அல்லூரி சீதாராம ராஜு, கோனசீமா மற்றும் எலுரு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் அரசால் திறக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

என்டிஆர்எப் மற்றும் எஸ்டிஆர்எப் குழுக்கள் அவசரநிலையைச் சமாளிக்க பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com