12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

புரளியால் முன்னெச்சரிக்கையாக மெரினா கடற்கரையில் காவலர்கள் குவிப்பு

போராட்டம் பரவலாம் என்று வந்த புரளியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புரளியால் முன்னெச்சரிக்கையாக மெரினா கடற்கரையில் காவலர்கள் குவிப்பு (கோப்பிலிருந்து)

Published On :

சென்னை: போராட்டம் பரவலாம் என்று வந்த புரளியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த பிளஸ் 2 வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 -ஆம் தேதி விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற 5-ஆம் நாள் போராட்டத்தில் பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரா்கள், பள்ளி வாகனங்களை தீயிட்டு எரித்தனா். பள்ளி அலுவலகத்தை சூறையாடினா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் புரளி பரவி வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.