புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஓடும் ரயிலில் நள்ளிரவில் சோதனை: 12 கிலோ கஞ்சா பறிமுதல்

தன்பாத் - ஆலப்புழா ரயிலில் நள்ளிரவில் சோதனை செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

News image

சோதனை நடத்தப்பட்ட பெட்டி

Updated On :20 ஜூலை 2022, 4:00 am

DIN

தன்பாத் - ஆலப்புழா ரயிலில் நள்ளிரவில் சோதனை செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

தன்பாத்திலிருந்து ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில்(13351) புதன்கிழமை விடியற்காலை 4 மணியளவில் ரயில்வே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், முன்பதிவு பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில், முன்பதிவு செய்யாமல்  பயணம் செய்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் உடமைகளை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், பயணச்சீட்டு எடுக்காமல் ஒடிசா மாநிலத்திலிருந்து பயணம் செய்த இருவரிடமிருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் திருப்பூரில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.