
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார்.
இந்நிலையில், நீதிபதி துரைசாமி நாளை மறுநாளுடன்(செப்.21) ஓய்வுபெறும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த நீதிபதியான இவர், செப். 22ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.