விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? - அமைச்சர் எஸ். ரகுபதி

சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை கோரியவர்கள், இப்போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்?

News image
Updated On :14 டிசம்பர் 2023, 3:19 pm IST

புதுக்கோட்டை: சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை கோரியவர்கள், இப்போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை  அவர் அளித்த பேட்டி:
சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணையைக் கோரினார்கள். இப்போது, நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்?

தனக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே எம்.பி.க்கள் பாஸ் கொடுப்பார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடக பாஜக உறுப்பினர் எப்படி பாஸ் கொடுத்தார்? புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி உண்மையைச் சொல்ல வேண்டும்.

திமுகவினர் எப்படி நாகரீகமாகப் பேச வேண்டும் என ஆளுநர் தமிழிசை எங்களுக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் உதயநிதி துணிச்சலாகப் பேசிவருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு சொல்கிறார்கள்.

ஆளுநர் முறைப்படி அரசியல் பேசக் கூடாது. ஆனால் தமிழிசை தொடர்ந்து தன்னை பாஜக மாநிலத் தலைவராகத் தான் நினைத்துக் கொண்டு பேசி வருகிறார்.

புழல் சிறையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றையும் மீறி ஒருவர் தப்பியிருக்கிறார். பார்வையாளர் பகுதிக்கு வந்து தப்பிப்போனதாக சொல்கிறார்கள். நிச்சயம் அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து சிறையில் அடைப்பார்கள் என்று ரகுபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.