புதுக்கோட்டை: சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை கோரியவர்கள், இப்போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணையைக் கோரினார்கள். இப்போது, நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்?
தனக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே எம்.பி.க்கள் பாஸ் கொடுப்பார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடக பாஜக உறுப்பினர் எப்படி பாஸ் கொடுத்தார்? புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி உண்மையைச் சொல்ல வேண்டும்.
இதையும் படிக்க | ஓடிடியில் கூச முனுசாமி வீரப்பன்!
திமுகவினர் எப்படி நாகரீகமாகப் பேச வேண்டும் என ஆளுநர் தமிழிசை எங்களுக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் உதயநிதி துணிச்சலாகப் பேசிவருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு சொல்கிறார்கள்.
ஆளுநர் முறைப்படி அரசியல் பேசக் கூடாது. ஆனால் தமிழிசை தொடர்ந்து தன்னை பாஜக மாநிலத் தலைவராகத் தான் நினைத்துக் கொண்டு பேசி வருகிறார்.
புழல் சிறையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றையும் மீறி ஒருவர் தப்பியிருக்கிறார். பார்வையாளர் பகுதிக்கு வந்து தப்பிப்போனதாக சொல்கிறார்கள். நிச்சயம் அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து சிறையில் அடைப்பார்கள் என்று ரகுபதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


