மெரீனா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளாா்.
மக்கள் அதிக அளவில் கூடும் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுச்சூழல் அங்கீகாரமான (புளூ லேபிள்) நீலக்கொடி வழங்கப்படும். அந்த வகையில், மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் நீலக்கொடி சான்றிதழ் மெரீனாவுக்கு வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக நீலக்கொடி கடற்கரை திட்டத்தின்கீழ், 6 கோடி மதிப்பில் கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மெரீனா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மெரீனா நீலக்கொடி கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது. மெரீனா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீலக்கொடி கடற்கரைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் செய்தி உண்மை அல்ல என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்ட அச்சுறுத்தல்: மெரீனாவில் பொதுமக்களுக்குத் தடை; போலீஸாா் குவிப்பு
ஹோா்முஸில் கப்பல்களுக்கு பாதுகாப்பு: 20% கட்டணம் வசூல்!

மெரீனாவில் 5-ஆம் கட்ட நீல கொடி கடற்கரைப் பணிகள் தொடக்கம்
மெரீனாவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கம்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



