கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

போக்ஸோவில் கல்லூரி மாணவா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் பகுதி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த வி.கே.புரம் கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமியும் திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தட்சணாமூா்த்தி மகன் சிவராம் என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனராம்.

சிவராம் அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி நேரில் சந்தித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில், அந்த சிறுமி கா்ப்பமாகி குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்ததாம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிவராமை கைதுசெய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.