எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கைப்பேசி: தேவை எச்சரிக்கை!

கைப்பேசி பயன்படுத்தாவிட்டாலும்,  அதன் கோபுரங்களின் கதிர்வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர்வீச்சும் பாதிக்கவே செய்யும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:01 pm IST

கைப்பேசி பயன்படுத்தாவிட்டாலும்,  அதன் கோபுரங்களின் கதிர்வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர்வீச்சும் பாதிக்கவே செய்யும். இதனால்தான் குருவிகள்  நகர்ப்புறங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

எப்போதும் கைப்பேசியை பயன்படுத்தாமல், அவசியத்துக்குப் பயன்படுத்துவது நல்லது.

முடிந்த அளவு கைப்பேசிகளை உபயோகிப்பதைத் தவிருங்கள். தரைவழி தொலைபேசியை உபயோகிக்கும் வசதி இருந்தால்,  அதை பயன்படுத்தவும்.

சுருக்கமான செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்றால்,  கைப்பேசியில் பேசுவதைத் தவிர்த்து எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால்,  சுலபமாக கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது. 

கைப்பேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம்.  கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

காதில் வைத்து பேசுதல்,  ஹெட் போனில் பேசுதல் போன்றவைகளைவிட  கைப்பேசியில் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது.  பொது
இடங்களில் இவ்வாறு பேச வேண்டாம்.

தூங்கும்பொழுது அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால், அதை  உடனே கைவிடவும்.

நீங்கள் மற்றவர்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஏற்றவுடன் கைப்பேசியைக் காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம்.  ஏனென்றால், பேசும்பொழுது ஏற்படும் கதீர்வீச்சின் அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

கைப்பேசியை வலது பக்கக் காதில் வைத்து பேசாமல்,  இடது பக்கக் காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

முக்கியமாக,  பயணம் செய்யும்பொழுது கைப்பேசியில் விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள்.  ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

கைப்பேசிகளை சட்டையின் இடது பக்கப் பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

கைப்பேசியில் பேசும்பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.