இந்திய வீராங்கனைகள்...!

அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.
Published on
Updated on
1 min read

போர்க்களத்தில் சாதித்த இந்திய வீராங்கனைகள் சிலர்:

அலேக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தவர் ராணிகிருபா தேவி.

கோரி முகமதுவை எதிர்த்துப் போரிட்டு அவரை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர் நாயகி தேவி.

தைமூர் படைகளை எதிர்த்துப் போரிட்டு அவர்களை ஓடச் செய்தவர் ராம் பியாரி குர்ஜரி.

அக்பரின் படைகளை எதிர்த்துப் போரிட்டு விரட்டியவர் ராணி துர்காதேவி.

ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போரிட்டு மறைந்தவர் பீவி தலேர் கௌர்.

ஒளரங்கசீப் படைகளை வென்று 25 ஆண்டுகள் நல்லாட்சி செய்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த மகாராணி சென்னம்மா.

ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போர் புரிந்தவர் சிவகங்கை சமஸ்தான ராணி வேலு நாச்சியார். அவருடைய தற்கொலைப் படை தளபதி குயிலி.

ஆங்கிலேயப் படையை வீரத்துடன் எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்தவர் ராணி லட்சுமிபாய். அவருக்கு உதவி செய்து  தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர் சாதாரண குடிமகள் ஜங்காரிபாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com