ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மரியாதை! பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
/

இந்திய சுதந்திரச் சுடர்கள்!

மகாத்மா காந்தி, அம்பேத்கார்!மனிதருள் மாணிக்கம் நம் நேரு!பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!பாரதம் காக்க எழுந்தார்கள்!

News image
Updated On :15 ஆகஸ்ட் 2015, 7:28 pm IST

மகாத்மா காந்தி, அம்பேத்கார்!

மனிதருள் மாணிக்கம் நம் நேரு!

பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!

பாரதம் காக்க எழுந்தார்கள்!

கப்பல் ஓட்டினார் வ.உ.சி!

கர்ஜித் தெழுந்தார் கட்டபொம்மன்!

அப்புறப் பட்டார் அன்னியரே!

அரவிந்தர், நேதாஜி முன் நின்றார்!

கோகலே, குமரன், வ.வே.சு!

கும்பெனிப் படைக்கு எதிரானார்!

பூலித் தேவன், மருது வீரர்கள்

பொங்கி எழுந்தார் முதலாக!

செண்பகராமன், சந்திரபோஸ்

தீரர் சத்தியமூர்த்தியவர்!

செம்மல் காம ராஜரெனச்

சுதந்திரச் சுடர்கள் பலருண்டு!

நெஞ்சை விட்டு விலகவில்லை!

நேற்றைய தியாகம் அகலவில்லை!

இந்திய விடுதலை தியாகச்சுடர்கள்

எழுச்சிக் காவியம் அறிவோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.