சங்கப்பலகை: தொல்காப்பியர் கூறும் தலைவி!
தொல்காப்பியத்தில், தலைவி பற்றிக் கூறுமிடங்கள் பல உள்ளன. அகத்திணை மாந்தர்களுள் ஒருத்தியாக - முதன்மையானவளாக அவள் குறிக்கப்படுகிறாள். களவிலும் கற்பிலும் அவளுக்கு இன்றியமையாத இடமுண்டு. தொல்காப்பியர் கூறும் தலைவியின் இயல்பு, வயது, ஒழுக்கம் ஆகியவற்றை இனி விரிவாகக் காண்போம்.









