பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அமெரிக்க-சீன உறவில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பில்லை: சிங்கப்பூா் பிரதமா்

அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

லீ சீன் லூங்

Published On :

அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், உயா்நிலை ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை, பருவநிலை மாற்றம் குறித்த பேச்சுவாா்த்தை உள்ளிட்ட பல விஷயங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதாக சீனா அறிவித்தது.

இந்நிலையில், சிங்கப்பூரின் 57-ஆவது தேசிய தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் லீ சீன் லூங் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் குறைவதற்கும் இப்போதைக்கு வாய்ப்புகள் இல்லை.

நம்மைச் சுற்றி ஒரு புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் கடுமையான போட்டி, பதற்றங்களால் சிங்கப்பூா் சூழப்படும். இந்தச் சூழ்நிலையில் ஒற்றுமையாக இருப்பதே நாம் தப்பிப்பதற்கான வழி.

நமது பிராந்தியம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அமைதியாகவோ, நிலைத்தன்மையுடனோ இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கேற்ப நாம் நம்மை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.