கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!

சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால் கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
இலங்கையில் சிக்கித் தவிப்பு
Updated On :29 நவம்பர் 2025, 4:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வந்து அங்கிருந்து இந்தியா திரும்ப இருந்த 150 தமிழர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் உணவின்றி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை பெயதுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கனமழை காரணமாக, இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கடந்த 3 நாள்களாக இயக்கப்படாததால், துபை, குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொழும்பு வந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு விமான நிலையத்தில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், ஏராளமானோர் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிட்வா புயல் காரணமாக இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால், 150 தமிழர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகிறார்கள்.

summary

300 Indians are stranded at Colombo Airport due to the lack of flights to Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.