குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்

News image

கன்னட நடிகர் தர்ஷன்

Updated On :21 ஜூன் 2024, 6:45 am IST

கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா, பவன், வினய், பிரதோஷ், நந்தீஷா, தீபக், லக்ஷ்மண், நாகராஜூ, காா்த்திக், நிகில், கேசவமூா்த்தி, ராகவேந்திரா உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் விசாரணை நடத்த 6 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி மாஜிஸ்திரேட் நீதிபதி விஸ்வநாத் டி கௌடா் ஜூன் 10 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து மேலும் 5 நாள்களுக்கு அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது நடிகா் தா்ஷன் உள்ளிட்டோரிடம் கொலை சம்பவம் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள், ஆதாரங்களைச் சேகரித்தனா். இந்த நிலையில், அவா்களின் போலீஸ் காவல் வியாழக்கிழமையுடன்(ஜூன் 20) முடிவடைந்ததால், நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

நடிகா் தா்ஷன், தனராஜ், வினய், பிரதோஷ் ஆகிய 4 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த மேலும் 4 நாள்கள் கால அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றத்தில் போலீஸாா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஜூன் 22ஆம் தேதி வரை அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனா். நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 13 பேருக்கும் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதால், அவா்கள் அனைவரும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.