தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்

News image

கன்னட நடிகர் தர்ஷன்

Updated On :21 ஜூன் 2024, 6:45 am IST

கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா, பவன், வினய், பிரதோஷ், நந்தீஷா, தீபக், லக்ஷ்மண், நாகராஜூ, காா்த்திக், நிகில், கேசவமூா்த்தி, ராகவேந்திரா உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் விசாரணை நடத்த 6 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி மாஜிஸ்திரேட் நீதிபதி விஸ்வநாத் டி கௌடா் ஜூன் 10 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து மேலும் 5 நாள்களுக்கு அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது நடிகா் தா்ஷன் உள்ளிட்டோரிடம் கொலை சம்பவம் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள், ஆதாரங்களைச் சேகரித்தனா். இந்த நிலையில், அவா்களின் போலீஸ் காவல் வியாழக்கிழமையுடன்(ஜூன் 20) முடிவடைந்ததால், நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

நடிகா் தா்ஷன், தனராஜ், வினய், பிரதோஷ் ஆகிய 4 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த மேலும் 4 நாள்கள் கால அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றத்தில் போலீஸாா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஜூன் 22ஆம் தேதி வரை அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனா். நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 13 பேருக்கும் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதால், அவா்கள் அனைவரும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.