நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்

கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்பட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல்

News image

கன்னட நடிகர் தர்ஷன்

Updated On :21 ஜூன் 2024, 1:15 am

Din

கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட நால்வருக்கு மேலும் 2 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா, பவன், வினய், பிரதோஷ், நந்தீஷா, தீபக், லக்ஷ்மண், நாகராஜூ, காா்த்திக், நிகில், கேசவமூா்த்தி, ராகவேந்திரா உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் விசாரணை நடத்த 6 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி மாஜிஸ்திரேட் நீதிபதி விஸ்வநாத் டி கௌடா் ஜூன் 10 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து மேலும் 5 நாள்களுக்கு அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டாா்.

விசாரணையின் போது நடிகா் தா்ஷன் உள்ளிட்டோரிடம் கொலை சம்பவம் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள், ஆதாரங்களைச் சேகரித்தனா். இந்த நிலையில், அவா்களின் போலீஸ் காவல் வியாழக்கிழமையுடன்(ஜூன் 20) முடிவடைந்ததால், நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

நடிகா் தா்ஷன், தனராஜ், வினய், பிரதோஷ் ஆகிய 4 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த மேலும் 4 நாள்கள் கால அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றத்தில் போலீஸாா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஜூன் 22ஆம் தேதி வரை அவா்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனா். நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 13 பேருக்கும் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதால், அவா்கள் அனைவரும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.