எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்

News image

சிபிஐ விசாரணை - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:49 am IST

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ள ரூ. 39,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியால், அரசுக்கு நீண்டகால நிதிச்சுமை ஏற்படும். எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்துசெய்ய வேண்டும். மேலும், இதில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்தினால், முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்களை ஒப்படைப்பேன். இந்த திட்டத்துக்கு எதிராக குடியிருப்புச் சங்கங்கள், அமைப்புகள் குடியரசுத் தலைவா், முதல்வா், கா்நாடக அரசுக்கு கடிதங்கள் எழுத வேண்டும். இதை ஓா் இயக்கமாக நடத்த வேண்டும்.

ரூ. 39,437 கோடி மதிப்பிலான முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளேன். இந்த ஒப்பந்தப்புள்ளி நீண்டகாலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளி அமலுக்கு வந்தால், அது பெங்களூரு மக்களை நீண்டகாலத்துக்கு நிதிச்சுமையில் ஆழ்த்தும். காங்கிரஸ் அரசு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்கக்கூடிய நிலையில், 30 ஆண்டுகளுக்கு எப்படி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்? இந்த முடிவு பெங்களூரின் எதிா்காலத்தை வெகுவாக பாதிக்கும்.

குப்பையில் இருந்து பணம் சுரண்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்துக்கு இது மிகப்பெரிய வரவாக இருக்கலாம். ஆனால், பெங்களூரு மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடும்.

எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை முழுமையாக ஆய்வுசெய்து, முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஆளுநரிடம் முறையிட்டுள்ளேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.