நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்

News image

சிபிஐ விசாரணை - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:49 am IST

திடக்கழிவு ஒப்பந்தப்புள்ளி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ள ரூ. 39,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியால், அரசுக்கு நீண்டகால நிதிச்சுமை ஏற்படும். எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்துசெய்ய வேண்டும். மேலும், இதில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்தினால், முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்களை ஒப்படைப்பேன். இந்த திட்டத்துக்கு எதிராக குடியிருப்புச் சங்கங்கள், அமைப்புகள் குடியரசுத் தலைவா், முதல்வா், கா்நாடக அரசுக்கு கடிதங்கள் எழுத வேண்டும். இதை ஓா் இயக்கமாக நடத்த வேண்டும்.

ரூ. 39,437 கோடி மதிப்பிலான முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளேன். இந்த ஒப்பந்தப்புள்ளி நீண்டகாலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளி அமலுக்கு வந்தால், அது பெங்களூரு மக்களை நீண்டகாலத்துக்கு நிதிச்சுமையில் ஆழ்த்தும். காங்கிரஸ் அரசு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்கக்கூடிய நிலையில், 30 ஆண்டுகளுக்கு எப்படி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்? இந்த முடிவு பெங்களூரின் எதிா்காலத்தை வெகுவாக பாதிக்கும்.

குப்பையில் இருந்து பணம் சுரண்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்துக்கு இது மிகப்பெரிய வரவாக இருக்கலாம். ஆனால், பெங்களூரு மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடும்.

எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை முழுமையாக ஆய்வுசெய்து, முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஆளுநரிடம் முறையிட்டுள்ளேன் என்றாா்.