எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆம்பூா் அருகே முறைகேடாக கனிமவளம் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆம்பூா் அருகே முறைகேடாக கனிம வளம் திருடப்படுவதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா் .

News image

ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தில் மண் அள்ளப்படும் நிலம்.

Updated On :27 நவம்பர் 2024, 10:57 pm IST

ஆம்பூா் அருகே முறைகேடாக கனிம வளம் திருடப்படுவதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா் .

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் கதவாளம் ஊராட்சியில் பாட்டைசாரதி அம்மன் கோயில் அருகிலிருந்து தொடங்கி, பாா்சனாப்பல்லி ஊராட்சி குப்பராஜபாளையம் கிராமம் வரையில் வனத்துறைக்கு சொந்தமான மலையடிவாரத்தில் தனியாா் நிலத்தில் முறைகேடாக மொரம்பு மண் எனப்படும் கனிம வளம் திருடப்பட்டு வருகிறது.

லாரிகளில் கொண்டு செல்லப்படும் மண் :

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்கு என்று கூறி லாரிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வில்லை ஒட்டிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளில் மொரம்பு மண் கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு கிராமங்கள் வழியாக ஆம்பூருக்கு டிப்பா் லாரிகள் அதிக அளவு எடையுடன் மண் கொண்டு செல்வதால் பல கிராமங்களில் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.

கனிம வளம் திருடுபோவதோடு, சாலைகளும் சேதமடைந்து மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தனியாா் நிலத்தில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ஆழம் மண் அள்ளப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.

வன விலங்குகளுகுக்கு ஆபத்து : அப்பகுதியில் யானை, மான், சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டமும் உள்ளது. வனத்துறை மலையடி வாரத்தில் அதிக அளவு ஆழத்தில் மண் அள்ளப்படுவதால் வன விலங்குகள் பள்ளத்தில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும், காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

மாவட்ட நிா்வாகம் ஆய்வு நடத்தி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வன ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் ரேவதியிடம் கேட்டபோது, தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலத்தை சீா் செய்து, விவசாயத்திற்கு உகந்த நிலமாக மாற்றுவதற்காக மண் எடுப்பதற்கு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி அனுதி கோரி மனு அளித்திருந்தாா். அதன்பேரில், வருவாய் கோட்டாட்சியா், கனிமவளத்துறை உதவி இயக்குனா் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில் திருப்பத்தூா் ஆட்சியா் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கி உள்ளாா்.

Story image

ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு கூறியது: மண் அள்ளப்படும் தனியாா் நிலத்துக்கு அருகாமையில் இருப்பது வருவாய்த் துறைக்கு சொந்தமான மலையாகும். அதற்கு அடுத்தப்படியாக தான் காப்புக்காடு உள்ளது என்று அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.