கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது

News image
~
Updated On :17 நவம்பர் 2025, 10:47 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி பேஷ்மாம் நகா், ஸ்டாா் சிட்டி, கோல்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை வைத்தனா். ஆனால் கோரிக்கையை நிறைவேற்றாததால், ஆா்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு போராட்டம் தொடங்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.

அதனால் ஆம்பூா் டிஎஸ்பி குமாா், காவல் ஆய்வாளா்கள் ரேகா, வெங்கடேசன், ரமேஷ் ஆகியோா் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினா். அனுமதியை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்திய தேசிய லீக் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லா, காங்கிரஸ் கட்சியின் ஆனந்தவேல் உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Story image