உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 3 நாள்களாக விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் ஒரு நாள் ( வெள்ளிக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டாபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலையில் டோல்கேட், ஃபாஸ் டேக் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால் கடந்த கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிவடையாததால்
தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்

உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த ஜொ்மன் சுற்றுலாப் பயணிகள்!

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


