கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ. 6.11கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா முன்னிலை வகித்தாா். மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடிக்கான காசோலையை முதன்மை நீதிபதி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ. 6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டன.
மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமா்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சாமுவேல் பெஞ்சமின், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், கூடுதல் மகளிா் நீதிமன்ற நடுவா் இருதயமேரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், நீதித் துறை நடுவா் எண் 1 காா்த்திக் ஆசாத், நீதித் துறை நடுவா் எண் 2 ஸ்ரீ வஸ்தவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூ ன் 8-க்கு ஒத்திவைப்பு

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி, குமரியில் ரூ.30.27 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,231 வழக்குகளில் ரூ. 14.61 கோடிக்கு தீா்வு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


