கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ராசிபுரத்தில் 800 பேருக்கு இலவச கண் கண்ணாடி

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சாா்பில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த 800 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சாா்பில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த 800 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் ராசிபுரம் பகுதியில் ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கடந்த செப்.27, 28 இல் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் கண் பரிசோதனை செய்தவா்களில் 800 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பூவாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம் பங்கேற்று பயனாளிகளுக்கு கண்ணாடிகளை வழங்கினாா். பட்டணம் பி.சி.செங்குட்டுவன், மருத்துவா்கள் சம்பாபூரி, தினேஷ், மனோஜ்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

படம் உள்ளது - 14ஸ்பெக்ஸ்

படவிளக்கம்-

பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் ராமசந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம்.