எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சேலம் மாநகரில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம்

சேலம் மாநகரில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:27 pm IST

 சேலம்: சேலம் மாநகரில் இன்று முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செல்வதால் காவல்துறையினர் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பின் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சேலம் மாநகர பகுதியில் தலைக்கவசம் கட்டாயச் சட்டம் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் சேலம் மானகராட்சி பகுதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தலைக்கவசம் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம்  அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையர் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை முதல் தலைக்கவசம் கட்டாயச் சட்டம் சேலம் மாநகரில் அமலுக்கு வந்தது. இதனையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிந்து  பயணம் செய்கின்றனர்.

அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தும் காவல்துறையினர், அவர்களை கண்டித்து எச்சரிப்பதோடு அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தலைக்கவசம் அணியாவிட்டால் வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தின் மூலம் அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதன்படி, சேலம் ஏவிஆர்  ரவுண்டனா ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகனத் தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மட்டும் 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் தலைக்கவசம் அணியாமல்  வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.