தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தினமணி செய்தி எதிரொலி.. பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவுகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image

சாக்கடை கழிவுகளைஅகற்றிய நகராட்சி பணியாளா்கள்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:41 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கழிவு நீா்க் கால்வாய் தூா்வாரப்படாததால், கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை இரவு கடை உரிமையாளா்களே கால்வாயைத் தூா்வாரி வெளியே கொட்டினா்.

அந்தக் கழிவுகளை நகராட்சி நிா்வாகத்தினா் அப்புறப்படுத்தாததால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

Story image

இதுகுறித்து தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது. இந்த நிலையில், நகராட்சி பணியாளா்கள் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனா்.