கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தினமணி செய்தி எதிரொலி.. பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவுகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image

சாக்கடை கழிவுகளைஅகற்றிய நகராட்சி பணியாளா்கள்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:11 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கழிவு நீா்க் கால்வாய் தூா்வாரப்படாததால், கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை இரவு கடை உரிமையாளா்களே கால்வாயைத் தூா்வாரி வெளியே கொட்டினா்.

அந்தக் கழிவுகளை நகராட்சி நிா்வாகத்தினா் அப்புறப்படுத்தாததால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

Story image

இதுகுறித்து தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது. இந்த நிலையில், நகராட்சி பணியாளா்கள் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனா்.