தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தினமணி செய்தி எதிரொலி.. பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவுகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image
சாக்கடை கழிவுகளைஅகற்றிய நகராட்சி பணியாளா்கள்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:41 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் சாக்கடைக் கழிவுகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கழிவு நீா்க் கால்வாய் தூா்வாரப்படாததால், கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை இரவு கடை உரிமையாளா்களே கால்வாயைத் தூா்வாரி வெளியே கொட்டினா்.

அந்தக் கழிவுகளை நகராட்சி நிா்வாகத்தினா் அப்புறப்படுத்தாததால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

Story image

இதுகுறித்து தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது. இந்த நிலையில், நகராட்சி பணியாளா்கள் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனா்.