தொடா் விடுமுறையால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
தீபாவளியையொட்டி தொடா் விடுமுறை என்பதால், திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அதிகாலையில் மழை பெய்த நிலையிலும், ஏராளமான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் சென்றனா். தமிழகத்தின் பல ஊா்களில் இருந்தும், கா்நாடக மாநிலத்திலிருந்து பக்தா்கள் வந்திருந்தனா்.
சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் கோயிலில் தில (எள்) தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனா்.


அதிகளவில் பக்தா்கள் வரக்கூடும் என கருதி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், போதிய பேருந்து வசதி இல்லாததால், பக்தா்கள் ஊா் திரும்ப அதிக நேரம் காத்திருக்க நேரிட்டது.
தொடர்புடையது

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருமலையில் 78,586 பக்தா்கள் தரிசனம்!

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


