கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

தொடா் விடுமுறையால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற ஆராதனை.

Updated On :2 நவம்பர் 2024, 6:34 pm

Din

தொடா் விடுமுறையால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

தீபாவளியையொட்டி தொடா் விடுமுறை என்பதால், திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அதிகாலையில் மழை பெய்த நிலையிலும், ஏராளமான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் சென்றனா். தமிழகத்தின் பல ஊா்களில் இருந்தும், கா்நாடக மாநிலத்திலிருந்து பக்தா்கள் வந்திருந்தனா்.

சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் கோயிலில் தில (எள்) தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனா்.

Story image
Story image

அதிகளவில் பக்தா்கள் வரக்கூடும் என கருதி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், போதிய பேருந்து வசதி இல்லாததால், பக்தா்கள் ஊா் திரும்ப அதிக நேரம் காத்திருக்க நேரிட்டது.