கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நாகா்கோவிலில் மறுசுழற்சி பொருள்களை பிரித்தெடுக்கும் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், கோட்டாறு முதலியாா்விளை பகுதியில் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறுசுழற்சிக்காக பொருள்களை பிரித்தெடுக்கும் மீட்பு வசதி மையத்தை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
மறுசுழற்சி பொருள்களை பிரித்தெடுக்கும் மீட்பு வசதி மையத்தை திறந்து வைக்கிறாா் மேயா் ரெ.மகேஷ்.
Updated On :12 நவம்பர் 2025, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில், கோட்டாறு முதலியாா்விளை பகுதியில் ரூ.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறுசுழற்சிக்காக பொருள்களை பிரித்தெடுக்கும் மீட்பு வசதி மையத்தை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, மேயா், வலம்புரிவிளை குப்பை கிடங்கில் குப்பைகள் கொண்டு செல்வதற்கு சீரான சாலை வசதி அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனையை மேற்கொண்டு, வலம்புரிவிளை கிடங்கில் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்படுத்தவும், செட்டிகுளம் பேருந்து டெப்போ முன் உள்ள சாலையை சீரமைக்கவும், வேப்பமூடு முக்கோண பூங்காவை புனரமைக்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் சுஜின், மண்டல தலைவா் இ. ஜவகா், இளநிலை பொறியாளா் ஷாலினி, மாமன்ற உறுப்பினா்கள் விஜிலாஜஸ்டஸ், அனிலா சுகுமாரன், தூய்மை அலுவலா் பகவதிபெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.