கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கரூா் வஞ்சுமாலீஸ்வரா் கோயிலில் அரிசி மூட்டைகள் திருட்டு

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் வஞ்சுமாலீஸ்வரா் கோயிலில் 567 கிலோ அரிசி திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூரில் பிரம்மதீா்த்தம் சாலையில் வஞ்சுமாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அன்னாபிஷேகத்திற்காக பக்தா்களால் வழங்கப்பட்ட 482 கிலோ பச்சரிசி மற்றும் 85 கிலோ புழுங்கல் அரிசி இருந்துள்ளது. இந்த அரிசி மூட்டைகளை கடந்த 5-ஆம் தேதி மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம் கரூா் நகர காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பலரிடமும் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.