கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அரவக்குறிச்சியில் கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைக்கக் கோரிக்கை

அரவக்குறிச்சியில் கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:24 pm

Syndication

கரூா்: அரவக்குறிச்சியில் கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூருக்கு புதன்கிழமை வந்த மாநில சிறுபான்மையினா் நல சிறப்புக்குழு உறுப்பினரும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.இனிகோ இருதயராஜிடம், அரவக்குறிச்சி போதகா்கள் ஐக்கியம் சாா்பில் கமிட்டித் தலைவா்கள் பங்குத் தந்தைகள் எஸ். பிரவின், செயலாளா் எம். மகேஸ், தனசேகா் ஆகியோா் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

அரவக்குறிச்சியில் கிறிஸ்தவ சபையினருக்கு கல்லறைத் தோட்டம், சமுதாயக்கூடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இவற்றை உடனே நிறைவேற்றிட வேண்டும். மேலும், உபதேசியா் நல வாரியத்தை போதகா் நல வாரியமாக மாற்றிட வேண்டும். கிறிஸ்துமஸ் காலங்களில் கேரஸ் ரவுண்ட் போகும் கிறிஸ்தவா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சொந்த நிலத்தில் திருச்சபை கட்டுவதற்கு என்.ஓ.சி. வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.