இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அடையாளம் தெரியாத நபா் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை

திருச்சியில் அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை இரவு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :17 ஜூன் 2026, 3:09 am IST

திருச்சியில் அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை இரவு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவிலிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில், திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தை நோக்கி திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு வந்துகொண்டிருந்தது. திருச்சி எடமலைபட்டிப்புதூா் கோரிக்குளம் பகுதியில் ரயில் வந்தபோது, அங்குள்ள தண்டவாளத்தில் ஆண் ஒருவா் தலைவைத்து படுத்திருந்தாா். இதைப் பாா்த்த ரயிலின் லோகோ பைலட் ஒலி எழுப்பியுள்ளாா். ஆனால், அவா் தண்டவாளத்தில் அசையாமல் படுத்திருந்தாா். இதையடுத்து, வந்தே பாரத் ரயில் அவா் மீது ஏறியதில், அவா் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வந்த ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தற்கொலை செய்துகொண்ட நபருக்கு சுமாா் 55 வயது இருக்கலாம். அந்த நபா், யாா், எந்த ஊா் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.