முகப்பு
பெங்களூரு

வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம்

 தருமபுரி, ஜன. 8: வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வழக்கறிஞர் எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தருமபுரியில் சனிக்கிழமை நடந்த சங்க மாநிலப் பொதுக்கு

பெங்களூரு

வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம்

 தருமபுரி, ஜன. 8: வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வழக்கறிஞர் எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தருமபுரியில் சனிக்கிழமை நடந்த சங்க மாநிலப் பொதுக்கு

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

 தருமபுரி, ஜன. 8: வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு சேம நலநிதி வாரியம் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வழக்கறிஞர் எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 தருமபுரியில் சனிக்கிழமை நடந்த சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத் தலைவர் எஸ்.கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். எம்பி இரா.தாமரைச்செல்வன் பேசுகையில், வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேமநல நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.

 தமிழ்நாடு வழக்கறிஞர் எழுத்தர்களின் நலநிதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் சேம நலநிதிவாரியத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். திட்ட நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 2 உறுப்பினர்களை நியமிக்க பார் கவுன்சில், தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

 கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதைப் போன்று தமிழகத்திலும் வழக்கறிஞர் எழுத்தர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மாநிலப் பொதுச்செயலர் எஸ்.பாண்டி, மாநிலப் பொருளாளர் ஐ.தேவராஜன், வருவான் வடிவேலன் கல்வி நிறுவனங்கள் தலைவர் எம்.வடிவேலன், எம்எல்ஏ இல.வேலுசாமி, சங்க மாவட்ட செயலர் கே.மாது, மாவட்ட தலைவர் கே.பி.நேரு உள்ளிட்ட பலர் பேசினர்.

முழு கட்டுரையைப் படிக்க →