பெங்களூரு

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சலுகை

தினமணி

கர்நாடகத்தில் ஏர்டெல் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இணையதளச் சேவையில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் கர்நாடக வர்த்தகத் தலைவர் கன்வர்பிர்சிங் செய்தியாளர்களிடம் கூறியது: -
 கர்நாடகத்தில் ஏர்டெல் செல்லிடப்பேசி இணைப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்டெல் இணைப்பை பெறுவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 எனவே கர்நாடகத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் இணையதளச் சேவையை வழங்க முன் வந்துள்ளோம்.
 ரூ. 333 விலையில் 3ஜி டேட்டா 30 ஜிபி வரை 30 நாள்களுக்கு வழங்கப்படும். இதனை 2ஜி, 3ஜி, 4ஜி செல்லிடப்பேசி வசதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 30 ஜிபியை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, நாள் ஒன்றுக்கு இவ்வளவு சேவை என்ற கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT