காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்
ஜாலஹள்ளி காவல் நிலையத்தில் நவ. 20-ஆம் தேதி வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
ஜாலஹள்ளி காவல் நிலையத்தில் நவ. 20-ஆம் தேதி வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு ஜாலஹள்ளி காவல் நிலையத்தில் நவ. 20-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
ஆர்வம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942527 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.