பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை: சந்தோஷ் ஹெக்டே
பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களுக்கு சுய பரிசோதனை தேவை என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள கன்னட சாகியத் பரிஷத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அவர் பேசியது:-
பத்திரிகைத் துறையில் உள்ளவர்கள் நேர்மையாகவும், தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குவது அவசியம். செய்த தவறுகளையும் அவ்வப்போது திருத்திக் கொண்டு தங்களை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். இதனால் மட்டுமே அவர்களால் உண்மையாகவும், சிறந்த செய்திகளையும் மக்களுக்கு தர முடியும்.
அண்மைக்காலமாக பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் புத்தகங்களை படிக்கும் பழக்கம் குறைவாக உள்ளது. இலக்கியங்களைப் படிப்பதால், மனித நேயம் அதிகரிக்கும். மனித நேயத்துடன் வரும் செய்திகளே சமூகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார் சந்தோஷ் ஹெக்டே.