பெங்களூரு

"மருந்தகங்களின் போராட்டத்துக்கு ஆதரவில்லை'

DIN

மாநில அளவில் செப். 28-ஆம் தேதி மருந்தகங்கள் மேற்கொள்ள உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு, கர்நாடக மருந்து விநியோகிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தராது என அறிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கர்நாடக மருந்து விநியோகிப்பாளர்கள் சங்கத்தின் செயலர் என்.மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் உள்ள மருந்தகங்கள் செப். 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்துக்கு கர்நாடக மருந்து விநியோகிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தருவதில்லை என முடிவு செய்துள்ளது. எங்கள் சங்கத்தின் சார்பில் கடந்த செப். 22-ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளோம்.
மருந்தகங்களை மூடுவதால், நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை மருந்தகங்களின் உரிமையாளர்கள் உணர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார் அவர்.                                                                          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT