கர்நாடகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசு பணியிடமாற்றம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணியிடங்களும் வருமாறு: முனிஷ் மெளட்கில்-டைரக்டர் ஜெனரல், நிர்வாக சீர்த்திருத்தம் மற்றும் பயிற்சி, மைசூரு; டாக்டர் ஜே.ரவிசங்கர்-மேலாண் இயக்குநர், கர்நாடக நகர்ப்புற குடிநீர் வடிகால் வாரியம், பெங்களூரு.
என்.ஜெயராம்-மேலாண் இயக்குநர், கிருஷ்ணா பாக்கிய நீர் நிறுவனம், பெங்களூரு; டாக்டர்.எம்.டி.ரேஜூ-ஆணையர், அளவிடுதல், மறுகுடியமர்த்தல், நில ஆவணங்கள் ஆணையரகம், பெங்களூரு; வி.பி.இக்கேரி-மாநகர ஆணையர், பெங்களூரு மாநகர மண்டல மேம்பாட்டு ஆணையம், பெங்களூரு.