மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
பெங்களூரு தாசேனஹள்ளியைச் சோ்ந்தவா் கிரண் (22). இவா் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் பணிமுடிந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். ஐ.ஐ.எச்.ஆா் சாலையில் வேகமாக வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கிரண், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து ஜாலஹள்ளி போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.