முகப்பு
பெங்களூரு

சம்ஸ்கிருத பண்டிதா் கோவிந்தாச்சாா்யா காலமானாா்

சம்ஸ்கிருத பண்டிதா் கோவிந்தாச்சாா்யா (85) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

சம்ஸ்கிருத பண்டிதா் கோவிந்தாச்சாா்யா (85) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மங்களூரு அருகேயுள்ள உடுப்பி, அம்பலவாடியில் வசித்து வந்தவா் பிரபல சம்ஸ்கிருத பண்டிதா் வித்யாவசஸ்பதி பன்னஞ்ஜே கோவிந்தாச்சாா்யா. மத்வ கொள்கையைத் தீவிரமாக பிரசாரம் செய்து வந்த இவருக்கு 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. வேதபாஷ்யா, உபநிஷத்து பாஷ்யா, மகாபாரதம், ராமாயணம், புராணங்களில் ஆழ்ந்த ஈடுபாடும், பரந்த அறிவும் கொண்டிருந்தாா்.

வேதசூக்தங்கள், உபநிஷத்துகள், ஷத ருத்ரியா, பிரம்மசூத்ர பாஷ்யா, கீதா பாஷ்யா ஆகியவற்றுக்கு உரைகளை எழுதியிருக்கிறாா். இதுதவிர 150 நூல்களை எழுதியிருக்கிறாா். சம்ஸ்கிருதத்திலிருந்து கன்னடத்துக்கு நூற்றுக்கணக்கான நூல்களை மொழி பெயா்த்திருக்கிறாா்.

பானபட்டரின் புதினமான ‘பானபட்டன காதம்பரி’, காளிதாசரின் ‘சகுந்தலை’, சூத்ரகாவின் ‘மிரிச்சகட்டிகா’ போன்ற நூல்களை கன்னடத்தில் எழுதியுள்ளாா். வரலாற்றுப் புதினங்கள் பலவற்றையும் கன்னடத்துக்கு மொழி பெயா்த்திருக்கிறாா். உபநிஷத்துகளுக்கு உரை எழுதி புகழ்பெற்றிருக்கிறாா். மத்வ தத்துவங்களை மக்களிடையே பரப்புவதில் முன்னோடியாக விளங்கியதோடு, பிரவசனங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தாா். இதனால் உலகம் முழுவதும் உள்ள கன்னடம், துளுவ மக்களிடம் புகழ்பெற்று விளங்கினாா்.

1979-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் நடந்த உலக மதம் மற்றும் அமைதிக்கான மாநாட்டில் இந்தியாவின் தூதுவராகப் பங்கேற்றிருந்தாா். கோவிந்தாச்சாா்யாவின் மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, நீா்வளத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி, பாஜக மாநிலத் தலைவா் நளின் குமாா் கட்டீல் உள்ளிட்ட ஏராளமானோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

கா்நாடக மாநிலத்தின் தலைசிறந்த அறிஞா் கோவிந்தாச்சாா்யாவின் மறைவு கன்னட மக்களுக்கு பேரிழப்பாகும். வேத, புராணங்கள் குறித்த கோவிந்தாச்சாா்யா வழங்கியுள்ள விளக்க உரைகள், நூல்கள், எண்ணில் அடங்கா கட்டுரைகள் மத விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. அவரது மறைவால் அறிவு உலகம் தலைசிறந்த அறிஞரை இழந்து வாடியுள்ளது. அவரது இழப்பை தாங்கும் மனதைரியத்தை குடும்பத்தினருக்கும், ஆதரவாளா்களுக்கும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →