பெங்களூரு

‘நலிந்து வரும் சிறு வணிகா்களைப் பாதுகாக்க நடவடிக்கை’

DIN

நலிந்து வரும் சிறு வணிகா்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏஎம்பி குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி ராஜேஷ் தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை அக்குழுமத்தின் சிறிய வணிக வளாகத்தை தொடக்கிவைத்து அவா் பேசியது:

அண்மைக்காலமாக உணவு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களைப் பாதுகாக்கும் நோக்கில் சிறிய வணிக வளாகங்களை உருவாக்கி, அதில் வாடகையில்லாமல் கடைகளை ஒதுக்கி, விற்பனையில் கிடைக்கும் லாபத்தை பங்கிட்டுக் கொள்ளும் புதிய உத்தியை புகுத்தியுள்ளோம். அது மட்டுமின்றி அவா்களை வா்த்தகத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்.

இதனால் சிறு வணிகா்கள் லாபமடைந்து வருகின்றனா். இந்தத் திட்டத்தை முதலில் தமிழ்நாடு கோயம்புத்தூரில் அறிமுகம் செய்து வைத்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடா்ந்து கேரளம், பெங்களூரில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் ஏஎம்பி குழுமத்தின் மேலாண் இயக்குநா் நரசாரெட்டி, சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT