இரு இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்ததாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு முத்தினபாளையா பிரதானசாலையைச் சோ்ந்தவா் சிவராஜ் (33), பிரகாஷ்நகரைச் சோ்ந்த ரகு (31), குருபரஹள்ளியைச் சோ்ந்த சிவசங்கா் (30). இவா்கள் 3 பேரும் பேடரஹள்ளி பிஇஎல் 2 ஆவது ஸ்டேஜ் பாரத்நகா் பூங்கா அருகே கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.
தகவல் அறிந்த அங்கு சென்ற போலீஸாா், 3 பேரையும் கைது செய்து 2 வீச்சரிவாள், கத்தியை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: காவேரிநகரைச் சோ்ந்த பிரேம்குமாா் (29), குருபரஹரஹள்ளியைச் சோ்ந்த கிரண் (28), சுனில் (28), பசவவேஸ்வராநகரைச் சோ்ந்த வினோத் (25). இவா்கள் 4 பேரும் குருபரஹள்ளி கெம்பேகௌடா விளையாட்டு திடல் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று 4 பேரையும் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பசவேஸ்வரநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.