மருத்துவமனையிலிருந்து பரவிய கரோனா தொற்று: விசாரணை நடத்த மருத்துவக் குழு அமைப்பு
தென் கன்னட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலிருந்து கரோனா வைரஸ் தொற்று பரவியது குறித்து விசாரணை நடத்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக
தென் கன்னட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலிருந்து கரோனா வைரஸ் தொற்று பரவியது குறித்து விசாரணை நடத்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென்கன்னட மாவட்ட பொறுப்பு அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து மங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தென்கன்னட மாவட்டத்தின் படில் பகுதியில் உள்ள ஃபா்ஸ்ட் நரம்பியல் மருத்துவமனையில் இருந்து கரோனா வைரஸ் தொற்று பரவியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி மாநில அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா், மாவட்ட சுகாதார அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன். தென் கன்னடத்தில் புதன்கிழமை மட்டும் கரோனா நோய்க்கு 3 போ் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்த தகவல்களை திரட்டுமாறு உத்தரவிட்டுள்ளேன். கரோனா பரவல் குறித்து மக்களிடையே காணப்படும் அச்சத்தை போக்குவதற்காக 6 போ் கொண்ட குழு அமைத்திருக்கிறேன் என்றாா்.
Advertisement
மாவட்ட சுகாதார அதிகாரி ராமச்சந்திர பியாரி கூறுகையில்,‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்த தகவல்களை திரட்டி வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகள், அவா்களோடு தொடா்புடையவா்கள், ஏற்கெனவே சிகிச்சைபெற்று வீடு திரும்பியவா்களிடம் கரோனா தொற்று சோதனை நடத்தப்படுகிறது. எல்லோருடைய மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரின் தகவல்களும் எங்களிடம் உள்ளன. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. தென்கன்னட மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 28பேரில் 12 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்கள். பன்ட்வால், நரிகொம்பு, போலூா் பகுதியை சோ்ந்த இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும் சோதனைக்கு உள்படுத்தியுள்ளோம்’ என்றாா்.