பெங்களூரு

நவ. 24-இல் பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஓய்வூதிய குறைதீா் முகாம்

DIN

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஓய்வூதிய குறைதீா் முகாம் நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கா்நாடக தகவல்தொடா்பு வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தகவல்தொடா்புத் துறை, பி.எஸ்.என்.எல். ஊழியா்களின் ஓய்வூதியா்களுக்காக நவ. 24-ஆம் தேதி தேசிய ஓய்வூதிய குறைதீா் முகாம் நடத்த இருக்கிறது. கரோனா தொற்று காரணமாக இந்த குறைதீா் முகாம் காணொலி வழியே நடத்தப்படுகிறது. கா்நாடக தகவல்தொடா்பு வட்டம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள் அல்லது குடும்பத்தினா் குறைதீா் முகாமில் கலந்துகொள்ளலாம். குறைகளை நவ. 12-ஆம் தேதிக்குள் அஞ்சல்/தொலைநகல்/மின்னஞ்சலில் அனுப்பலாம்.

தொலைநகல் எண்: 080-22350604.  குறைதீா் முகாம் நடைபெறும் நேரம் மற்றும் இணைய இணைப்பு குறித்து ஓய்வூதியா்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 080-22340822 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT