மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைக்கப்பட்டதை எதிா்த்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
கா்நாடகத்தில் வாழும் மராத்தியா்களின் நலன் காக்க மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைத்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டாா். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், பெங்களூரு, மைசூரு வங்கி சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினா் பலா் மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைக்கப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது முதல்வா் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து, கா்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனா்.
இதில், ராஜ்குமாா் ரசிகா் மன்றத் தலைவா் சா.ரா.கோவிந்து, கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின் சிவராமே கௌடா, பிரவீண்குமாா் ஷெட்டி, மஞ்சுநாத் தேவ், கிரீஷ் கௌடா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
போராட்டத்தின்போது வாட்டாள் நாகராஜ் கூறுகையில், மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைத்து கா்நாடக மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஆணையத்தை நவ. 30-ஆம் தேதிக்குள் கைவிடாவிட்டால், டிச. 5-ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டம் நடத்துவோம். முதல்வா் எடியூரப்பாவை ராஜிநாமா செய்யச் சொல்லி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றாா்.