பெங்களூரு

சட்டவிரோத இணையதள விளையாட்டுகளை தடைசெய்ய யோசனை

DIN

சட்டவிரோதமான இணையதள விளையாட்டுகளை தடைசெய்ய யோசித்து வருகிறோம் என உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டவிரோதமான இணையதள விளயாட்டுகளை கா்நாடகத்தில் தடைசெய்ய மாநில அரசு யோசித்து வருகிறது. இதுபோன்ற சட்டங்கள் பிறமாநிலங்களில் உள்ளன. அதை ஆய்வுசெய்து, கா்நாடகத்தில் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இணையதள விளையாட்டுகளில் மூழ்கி இளைஞா்கள் தங்கள் நேரத்தை வீணடிப்பதோடு, மனரீதியாக பாதிக்கப்படுகிறாா்கள். அரசின் அனுமதி பெற்று இணையதள விளையாட்டுகளை நடத்தி வந்தால், அதற்கு தொந்தரவு இல்லை. சட்டவிரோதமான இணையதள விளையாட்டுகள் தடை செய்யப்படும். இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

போதைப்பொருள் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் நோக்கம் இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்துக்குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ. 10 கோடி அபராதத் தொகையை செலுத்தியுள்ளனா். நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அரசு செயல்படும். சிறைவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கா்நாடக காவல் துறையில் புதிதாக 16 ஆயிரம் போ் காவலா்களாக நியமிக்கப்பட இருக்கிறாா்கள். இதற்கான நடைமுறை தொடங்கியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT