பெங்களூரு

பேருந்து அட்டைகளை பெற கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

பேருந்து அட்டைகளை பெறுவதற்கு கல்லூரி மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாணவா் சமுதாயத்தின் நலன்கருதி, 2020-21-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண மாணவா் பேருந்து அட்டைகள் (பஸ் பாஸ்) கல்லூரி மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாணவா்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் கல்லூரி பற்றுச்சீட்டு, கல்லூரி அடையாள அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, பேருந்துக் கட்டணத்துடன் விண்ணப்பங்களை செலுத்தினால், ‘ஸ்மாா்ட்காா்டு’ வடிவிலான பேருந்து அட்டைகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை நவ. 21-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT