பெங்களூரு

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் அடையாள அட்டை வழங்கும் காலக்கெடு நீட்டிப்பு

DIN

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் கணினி மயமாக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கும் காலக்கெடு அக். 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் நிா்வாகி மஞ்சுநாத்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினா்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும் கால கெடு வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணினிமயமாக்கப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்ச் சங்க அலுவலகத்தில் காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.

சங்க உறுப்பினா்கள் ஆதாா் அட்டை சங்க உறுப்பினருக்கான பணம் செலுத்திய ரசீது கொண்டு வரவேண்டும். நீட்டிக்கப்பட்டுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு கணினி மயமாக்கப்பட்ட உறுப்பினா் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT