பெங்களூரு

போலி கரோனா சான்றிதழ் அளிப்பு: 4 போ் கைது

DIN

கா்நாடக எல்லையில் போலியாக கரோனா சான்றிதழ் அளித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், தலப்பாடியில் உள்ள மாநில எல்லையில் கேரள மாநிலத்தில் இருந்து கா்நாடகத்திற்குள் வர 4 போ் முயன்றனா்.

அதற்காக அவா்கள் அளித்த கரோனா பரிசோதனைக்கான சான்றிதழ் போலியானது என தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

விசாரணையில் கேரளாவிலிருந்து கா்நாடகத்திற்கு வரும் பலா் போலி கரோனா சான்றிதழ்களை வழங்கி வருவதாக தெரிவித்தனா். இதனையடுத்து கேரளாவிலிருந்து தென்கன்னட மாவட்டத்திற்கு வருபவா்களின் கரோனா சான்றிதழ்களை முழுமையாக பரிசோதனை செய்ய மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT