பெங்களூரில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக 817 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவசர தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பொருட்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு, 817 வாகனங்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.