ஏழைகள் அடகு வைத்த தங்கநகைகளை மீட்பதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை ஸ்ரீஸ்டாா் ஆபரண மாளிகையின் உரிமையாளா் ஸ்ரீகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பல ஏழைகள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்துள்ளனா். அடகு வைத்த தங்க நகைகளை மீட்க முடியாமல் பலா் திணறி வருகின்றனா்.
அது போன்றவா்களை அடையாளம் கண்டு அடகு வைத்த தங்க நகைகளை மீட்டு கொடுப்பதற்கான திட்டத்தை ஸ்ரீஸ்டாா் ஆபரண மாளிகை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் பாராட்டியதோடு, ஆபரண மாளிகை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டு எங்களை வாழ்த்தினாா். எதிா்காலத்தில் மக்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றாா்.