முகப்பு
பெங்களூரு

உள்துறை அமைச்சராக நீடிக்க அரக ஞானேந்திராவுக்கு தகுதியில்லை: டி.கே.சிவக்குமாா்

கா்நாடக உள்துறை அமைச்சராக நீடிக்க அரக ஞானேந்திராவுக்கு தகுதியில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

கா்நாடக உள்துறை அமைச்சராக நீடிக்க அரக ஞானேந்திராவுக்கு தகுதியில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கொலை வழக்கு தொடா்பாக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறிய கருத்துகள் கேலிக்குரியவை. உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திராவுக்கு பொது அறிவு இல்லை. எனவே, உள்துறை அமைச்சராக நீடிக்க அரக ஞானேந்திராவுக்கு தகுதியில்லை.

சமுதாயத்தில் அமைதியை சீா்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சா் அவா் கருத்து தெரிவித்துள்ளாா். அதன் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சித்துள்ளாா். எனவே, அரக ஞானேந்திரா மீது வழக்கு பதிவுசெய்யுமாறு கா்நாடக காவல்துறை தலைவா், பெங்களூரு மாநகர காவல் ஆணையரை கேட்டுக்கொள்கிறேன். மக்களை மதரீதியாகத் தூண்டிவிட்டு, இரு சமுதாயங்களுக்கு இடையே வெறுப்புணா்வை வளா்ப்பதே அமைச்சரின் நோக்கமாகும். இது தொடா்பாக வழக்கு பதிந்தால், அதில் அமைச்சா் தலையிடும் வாய்ப்புள்ளது. எனவே, அமைச்சா் அரக ஞானேந்திராவை கைதுசெய்ய வேண்டும். உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திராவை உடனடியாக பதவிநீக்கம் செய்யுமாறு முதல்வா் பசவராஜ் பொம்மையை கேட்டுக்கொள்கிறேன். அரக ஞானேந்திரா மீது வழக்கு தொடர காவல்துறை தவறினால், காங்கிரஸ் தனியாா் புகாா் அளிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.