துப்பாக்கியால் சுட்டு போலீஸ் தற்கொலை
கா்நாடகத்தில் காவல் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடகத்தில் காவல் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.
உடுப்பியில் உள்ள ஆதி உடுப்பி உயா்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தவா் ராஜேஷ் குந்தா். உடுப்பி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். ஆயுத காவல்படையுடன் இணைக்கப்பட்டிருந்த இவருக்கு துப்பாக்கி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸாா், தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை போலீஸ் உயரதிகாரிகள் பாா்வையிட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.